Saturday, November 16, 2019
Tuesday, October 22, 2019
தினை முறுக்கு
- தினை - 1 கப்
- அரிசிமாவு - 1 கப்
- பொட்டுக்கடலை மாவு - 2டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
- சீரகம் - 2 டீஸ்பூன்
- பட்டர் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- தினையை கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து , முறுக்கு மாவு அரைப்பது போல் தண்ணீரை வடித்து 20 நிமிடங்கள் உலர்த்தி மிக்சியில் எடுத்துக்கொள்ளவும்.
- அரைத்த தினை மாவில் சரிக்கு சரி அரிசி மாவு சேர்த்தது கொண்டு,பொட்டுக்கடலை மாவு 2 டீஸ்பூன், உப்பு ,சீரகம், பெருகாயத்தூள், பட்டர் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளும்.
- முறுக்கு மாவு பிசையும் பதத்திற்கு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- அடுப்பில் கடாயில் முறுக்கு சுடுவதற்கு ஏற்ப எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் நன்கு காய்ந்ததும் முறுக்கு உழக்கில் நம் விருப்பத்திற்கு ஏற்ப அச்சு போட்டு பிசைந்து வைத்துள்ள மாவை அதில் வைத்து முறுக்கை எண்ணெயில் கவனமாக பிழிந்து கொள்ளவும்.
- ஒரு பக்கம் நன்கு சிவந்து வெந்ததும் மறுப்பக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.
- இரண்டு பக்கம் நன்கு சிவந்து வெந்ததும் முறுக்கை எடுத்து பரிமாறவும்.
- சுவையான சத்து நிறைந்த, உடலுக்கு சத்து தரக்கூடிய தினை முறுக்கு தயார்.
Monday, October 21, 2019
கம்பு முறுக்கு
தேவையான பொருள்கள்:
- கம்பு - 1 கப்
- அரிசிமாவு - 1 கப்
- பொட்டுக்கடலை மாவு - 2டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
- சீரகம் - 2 டீஸ்பூன்
- பட்டர் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- கம்பை கழுவி 1மணி நேரம் ஊற வைத்து , முறுக்கு மாவு அரைப்பது போல் தண்ணீரை வடித்து 20 நிமிடங்கள் உலர்த்தி மிக்சியில் எடுத்துக்கொள்ளவும்.
- அரைத்த கம்பு மாவில் சரிக்கு சரி அரிசி மாவு சேர்த்தது கொண்டு,பொட்டுக்கடலை மாவு 2 டீஸ்பூன், உப்பு ,சீரகம், பெருகாயத்தூள், பட்டர் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளும்.
- முறுக்கு மாவு பிசையும் பதத்திற்கு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- அடுப்பில் கடாயில் முறுக்கு சுடுவதற்கு ஏற்ப எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் நன்கு காய்ந்ததும் முறுக்கு உழக்கில் நம் விருப்பத்திற்கு ஏற்ப அச்சு போட்டு பிசைந்து வைத்துள்ள மாவை அதில் வைத்து முறுக்கை எண்ணெயில் கவனமாக பிழிந்து கொள்ளவும்.
- ஒரு பக்கம் நன்கு சிவந்து வெந்ததும் மறுப்பக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.
- இரண்டு பக்கம் நன்கு சிவந்து வெந்ததும் முறுக்கை எடுத்து பரிமாறவும்.
- சுவையான சத்து நிறைந்த, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கம்பு முறுக்கு தயார்.
Saturday, October 19, 2019
தினை லட்டு
தேவையான பொருள்கள்:
- தினை அரிசி - 1 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- கருப்பட்டி - 3/4 கப்
- நெய் - தேவையான அளவு
- முந்திரி - 10
- திராட்சை - 5
- ஏலக்காய் - 3
செய்முறை:
- தினைஅரிசியை சுத்தம் செய்து வெறும் கடாயில் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
- பாசிப்பருப்பையும் அதே போல் வறுத்து கொள்ளவும். சூடு ஆற விட்டு மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
- கடாயில் 1/2 கப் தண்ணீர், கருப்பட்டி இரண்டும் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து வடிக்கட்டி கொள்ளவும்.
- நெய்யை கடாயில் ஊற்றி காய்ச்சி கொள்ளவும்.
- முந்திரி, திராட்சையை நெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
- ஏலக்காயை பொடித்து வைத்து கொள்ளவும்.
- கருப்பட்டி காய்ச்சிய தண்ணீரில், அரைத்து வைத்துள்ள தினை,பாசிப்பருப்பு மாவை போட்டு கலந்து கொள்ளவும்.
- பிறகு காய்ச்சி வைத்துள்ள நெய்யை சிறிது சிறிதாக கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி லட்டு பிடிக்கும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- லட்டு பிடிக்கும் பதம் வந்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பிறகு அனைத்து மாவையும் நமக்கு தேவையான அளவில் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
- இப்போது சுவையான,சத்து நிறைந்த தினை லட்டு தயார்.
Wednesday, October 16, 2019
கம்பு லட்டு
தேவையான பொருள்கள்:
- கம்பு மாவு - 1 கப்
- பச்சைப்பயிறு மாவு - 1/4 கப்
- பேரிச்சம்பழம் - 5
- முந்திரி - 5
- கருப்பட்டி - 1/2 கப்
- வறுத்து பொடித்த எள் - 1 டீஸ்பூன்
- நெய் - 1 டீஸ்பூன்
- பால் - தேவையான அளவு
- உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
- அடுப்பில் வெறும் கடாயில் கம்பு மாவு, பச்சைப்பயிறு மாவு இரெண்டையும்தனி தனியே வாசம் வரும் வரை அடி பிடிக்காமல் வறுத்து கொள்ளவும்.
- வறுத்த மாவை மிக்சியில் பொடித்த கருப்பட்டியுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.
- கடாயில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி,பொடியாக நறுக்கிய பேரிச்சைப்பழத்தை சேர்த்து வறுத்து மாவில் கொட்டவும்.
- அத்துடன் பொடித்த எள், உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
- பாலை காய்ச்சி பொறுக்கும் சூட்டில் மாவில் கொஞ்சமாக தெளித்து லட்டு பிடிக்கவும்.
- இதனை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
- பாலுக்கு பதில் இன்னும் கோசம் நெய் சேர்த்து லட்டு பிடித்தல் 20 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
- சுவையான, சத்து நிறைந்த குளிர்ச்சி தர கூடிய கம்பு லட்டு தயார்.
Tuesday, October 15, 2019
கம்பு கொழுக்கட்டை
தேவையான பொருள்கள்:
- கம்பரிசி - 1கப்
- வெங்காயம் - 1/2 கப்
- ப.மிளகாய் - 3
- கருவேப்பிலை - 2 கொத்து
- தேங்காய் துருவியது - 1/ கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- கடுகு,உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- க.பருப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை:
- கம்பரிசியை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு கம்பை மிக்சியில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, கடலை பருப்பு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள கம்பு மாவை சேர்த்து கிளறவும்.
- மாவில் பச்சை வாசம் போகும் வரை அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும்.
- மாவு ஆறியதும் கொழுக்கட்டைகளாக (படத்தில் காட்டியவாறு) பிடித்து கொள்ளவும்.
- பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் சூடானதும் இட்லி தட்டில் பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடங்கள் முடி போட்டு வேக வைத்து கொள்ளவும்.
- 10 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து கொழுக்கட்டையை எடுத்து சூடாக பரிமாறவும்.
- சூடான, சுவையான,சத்து நிறைந்த கம்பு கொழுக்கட்டை தயார்.
Thursday, October 10, 2019
கம்பங்கூழ்
தேவையான பொருள்கள்:
- கம்பு - 1 கப்
- மோர் - 2 கப்
- உப்பு - தேவையான அளவு
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கைப்பிடி
- மோர் மிளகாய் - தேவையான அளவு
- மாங்காய் (மிளகாய்,உப்பு சேர்த்தது ) - தேவையான அளவு
- வடகம் ( கலர் ) - தேவையான அளவு
செய்முறை:
- கம்பு குருணையை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- ஊறிய கம்பை 1:3 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.
- விசில் இறங்கியதும் வேகவைத்துள்ள கம்பை எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் மோர் சேர்த்து நீர்க்க கரைத்து,அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு சரி பார்த்து பரிமாறவும்.
- இப்போது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய,சத்தான கம்பங்கூழ் தயார்.
- இதனை மோர் மிளகாய், வடகம், சிறிதாக நறுக்கிய மாங்காயை மிளகாய் தூள் உப்பு சேர்த்து ஊறவைத்து இதனுடன் பரிமாறினாள் சுவை அதிகம்.
- மீதம் உள்ள கம்பங்கூழை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து உருண்டை மூழ்கும் மாறு வைக்கவும்.
- இவ்வாறு வைத்துள்ள உருண்டைகள் 4-5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். (திறந்த வெளியில் வைத்தால் தண்ணீரை தினமும் மாற்றிவிட வேண்டும்)
- குளிர் சாதன பெட்டியில் வைத்தால் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
Tuesday, October 8, 2019
கம்பு இலை அடை
தேவையான பொருள்கள்:
- கம்பரிசி - 1 கப்
- கடலை பருப்பு - 1/2 கப்
- வெல்லம் (கருப்பட்டி ) - 1/2 கப்
- நெய் - 2 டீஸ்பூன்
- முந்திரி - 10
- ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - 1 சிட்டிகை
- வாழை இலை - 5
செய்முறை:
மேல் மாவுக்கு,
- கம்பரிசியை கழுவி 3 மணி நேரம் ஊறவைத்து, மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்க்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவு,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கைவிடாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும்.
- மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டி இல்லாமல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
- மேல் மாவு தயார்.
பூரணம்,
- கடலைப்பருப்பை கழுவி குக்கரில் ஒருபோட்டு 1/2 கப் தண்ணீர் சேர்த்து 1 விசில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- விசில் இறங்கியதும் பருப்பை தண்ணீர் வடித்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து, அரைத்த கடலை மாவுடன் சேர்த்து கிளறி கொள்ளவும்.
- பிறகு அகிலாரிய மாவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
செய்முறை,
- வாழை இலையில் எண்ணெய் தடவி வெறும் தணலில் வாட்டி எடுத்த்து கொள்ளவும்.
- கம்பு மாவை உருண்டையாக (பூரி உருண்டை) உருட்டி வாட்டி வைத்துள்ள வாழை இலையில் வைத்து தட்டி கொள்ளவும்.
- தட்டிய மேல் மாவின் நடு பகுதியில் பூரணத்தை சேர்த்து இலையை இரண்டாக மூடி தட்டி கொள்ளவும்.
- எவ்வாறு அனைத்து மாவுகளையும் தயார் செய்து கொண்டு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சசேர்த்து கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் வாழை இலையில் தட்டி வைத்துள்ள அட்டையை வைத்து மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் வேகவிடவும்.
- 10 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து இலையில் உள்ள அட்டையை எடுத்து சூடாக பரிமாறவும்.
- சூடான, சுவையான, சத்து நிறைந்த ,உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய கம்பு இலை அடை தயார்.
கம்பு பருப்பு சாதம்
தேவையான பொருள்கள்:
- கம்பரிசி - 1 கப்
- து.பருப்பு - 1/4 கப்
- பா.பருப்பு - 1/4 கப்
- தண்ணீர் - 3 கப்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- வெங்காயம் - 1/2 கப்
- தக்காளி - 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை - 2 கொத்து
- மல்லி தழை - 1 கொத்து
( மிளகு - 1 டீஸ்பூன் ,சீரகம் - 1டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, பூண்டு - 5 )
செய்முறை:
- கம்பு,பருப்பு இரண்டையும் கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- மிளகு, சீரகம், வரமிளகாய் மூன்றையும் மிக்சியில் அரைத்து பொடி செய்து கடைசியாக பூண்டையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று விட்டு எடுத்து கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து மசித்து கொள்ளவும்.
- பிறகு மசாலா பொருட்களை ( மஞ்சள், மிளகாய் தூள்) சேர்த்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்த பொடியை சேர்த்து வதக்கம்.
- மசாலா பச்சை வாசம் போனதும் ( கம்பு,பருப்பு சேர்த்து 1:2)என்ற அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- தண்ணீர் நன்கு கொதிக்கும் பொது கழுவி ஊற வைத்த கம்பு,பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் உப்பு கரம் பார்த்து மல்லி தழை தூவி குக்கரை மூடி 5 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
- சுவையான,சத்து நிறைந்த,உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கம்பு பருப்பு சத்தம் தயார்.
- இதனை தயிர், தேங்காய் துருவல்,ஊறுகாயுடன் பரிமாறினால் சுவை அதிகமாக இருக்கும்.
Saturday, October 5, 2019
கம்பு சாதம்
தேவையான பொருள்கள்:
- கம்பு - 1 கப்
- பச்சரிசி குருணை - 1/2 கப்
- உப்பு - தேவையான பொருள்கள்
- தண்ணீர் - 3 கப்
செய்முறை:
- கம்பையும், பச்சரிசி குருணையையும் கழுவி 20 நிமிடக்கல் உற வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்தி வந்தவுடன் ஊறவைத்த கம்பு,பச்சரிசி குருணையை போட்டு நன்றாக வேகவேக வைக்கவும்.
- கம்பு நன்கு மலர்ந்து வந்ததும் மீதம் உள்ள தண்ணீரை வடித்து கொள்ளவும்.
- குக்கரில் கம்பு சாதம் செய்பவர்கள் 1:3 என்ற அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- அடுப்பில் 3 விசில் வைத்து, 5 நிமிடங்கள் சிமில் வைத்து இறக்கம்.
- சுவையான,சத்து நிறைந்த கம்பு சாதம் தயார்.
Thursday, October 3, 2019
வரகரிசி இட்லி
தேவையான பொருள்கள்:
- வரகரிசி - 1 கப்
- உ.பருப்பு - 1/4 கப்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் வரகரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
- மற்றொரு பாத்திரத்தில் உ.பருப்பையும், வெந்தயம் இரெண்டையும் தண்ணீர் ஊற்றி கழுவி 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
- ஊறவைத்த அரிசியையும், பருப்பையும் இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து,8 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும்.
- 8 மணி நேரம் களித்து அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்தவுடன் புளித்த மாவை எடுத்து இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 5-10 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.
- வேகவைத்த இட்லிகளை சூடாக பரிமாறவும்.
- சூடான,சுவையான,சத்துநிறைந்த வரகரிசி இட்லி தயார்.
வரகரிசி பணியாரம்
தேவையான பொருள்கள்:
- வரகரிசி - 2 கப்
- உ.பருப்பு - 3/4 கப்
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - 1 டேஸ்பூன்
- தேங்காய் - சின்ன துண்டு
- க. பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கொத்த மல்லி - 1 கொத்த மல்லி
- ப. மிளகாய் - 2
செய்முறை:
- வரகரிசி, உ.பருப்பையும் 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- ஊறியதும் கிரைண்டரில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- கடாயில் தாளிப்பதர்கு ஏற்ப எண்ணெய் ஊற்றி அதில் கடுகு , க.பருப்பு , ப.மிளகாய் , சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- பிறகு அரைத்த மாவில் தாளித்தவற்றை கொட்டி தேவையான அளவு உப்பு போட்டு இட்லி மாவு பதத்துக்கு கலந்து கொள்ளவும்.
- குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து மாவை சட்டியில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- சுவையான, சத்து நிறைந்த வரகரிசி பணியாரம் தயார்.
Monday, September 30, 2019
வரகு தக்காளி சாதம்
தேவையான பொருள்கள்:
- வரகரிசி - 1 கப்
- வெங்காயம் - 2 பெரியது
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 2
- கடுகு,உளுந்து - 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை - 2 கொத்து
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மல்லி தூள் - 3 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 குழி கரண்டி
- நெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
- ஒரு கப் வரகு அரிசியை 2:2 1/2 அளவில் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வேகா வைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுந்து, கருவேப்பிலை, பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பிறகு இஞ்சி,பூண்டு பேஸ்ட் போட்டு 2 நிமிடம் வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- மசாலாவை ( மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்) போட்டு எண்ணெய் நன்கு தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- பிறகு 1 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதித்து தொக்கு பதம் வரும் வரை வதக்கி இறக்கவும்.
- இப்போது தக்காளி தொகை வடித்த வரகு சாதத்தில் கொட்டி சாதம் உடையவள் கிளறி சிறிது மல்லி தழை தூவி பரிமாறவும்.
- சுவையான, சத்து நிறைந்த வரகு தக்காளி சாதம் தயார்.
Sunday, September 29, 2019
வரகு அரிசி தம் பிரியாணி
தேவையான பொருள்கள்:
- வரகரிசி - 2 கப்
- கேரட்,பட்டாணி,பீன்ஸ் - 1/2 கப்
- காளிஃபிளவர், உருளை - 1/2 கப்
- பச்சை மிளகாய் - 2
- பெரிய வெங்காயம் - 1/2 கப் ( நீளமாக நறுக்கியது)
- தக்காளி - 1/4 கப்
- எலுமிச்சை ஜூஸ் - 1 டேபுள் ஸ்பூன்
- எண்ணெய் - 1 குழி கரண்டி
- நெய் - 4 டீஸ்பூன்
- மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- தயிர் - 1 டேபுள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 1:2
தாளிப்பு பொருள்கள் :
- பட்டை - 1
- கிராம்பு - 3
- பிரிஞ்சி இலை - 1
- அன்னாசி பூ - 1
- புதினா - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டேபுள் ஸ்பூன்
செய்முறை:
- வரகரிசியைக் கழுவி 1/2 நேரம் ஊறவைக்கவும்.
- அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயும், நெய்யும் சேர்த்து காயவிடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் தாளிப்பு பொருள்களை ( பட்டை, கிராம்பு,பிரிஞ்சி இலை) போடவும்.
- பிறகு பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதக்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் , புதினா போட்டு வதக்கவும்.
- பிறகு தக்காளி போட்டு சிறிது நேரம் வதக்கியுடன், வெட்டி வைத்து உள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.
- காய்கள் நன்கு வதங்கியதும் உப்பு, மசாலா பொருள்களை ( மிளகாய் தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா ) போட்டு வதக்கவும்.
- தயிர் சேர்த்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- வதக்கிய காய்களில் தண்ணீர் (1:2) சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- தண்ணீர் நன்கு கொதித்ததும் எலுமிச்சை பழச்சாறும், ஊற வைத்த வரகு அரிசியையும் சேர்த்து மூடி போட்டு,அடுப்பை சிமில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.
- பிறகு முடியை திறந்து மீதம் உள்ள நெய் சேர்த்து சாதம் உடையாமல் கிளறி 5 நிமிடம் வேகவிடவும்.
- இப்போது சாதம் 3/4 பதம் வெந்து இருக்கும். அடுப்பை அனைத்து விடவும்.
தம் போடும்முறை:
- பாத்திரத்தின் வாயை ஒரு துணியில் கட்டி அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரி தணல் போடலாம்.
- எரி தணல் கிடைக்காவிட்டால் நன்றாக கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்த தட்டின் மேல் வைக்கலாம்.
- இல்லை என்றால் சூடாக உள்ள குக்கரை கூட வைக்கலாம்.
- அதிக பட்சம் 10 நிமிடமே போதும்.
- இறுதியாக பிரியாணியை சிறிது நெய் விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
- சுவையான, சத்து நிறைந்த வரகரிசி பிரியாணி தயார்.
Saturday, September 28, 2019
வரகு அரிசி பொங்கல்
தேவையான பொருள்கள்:
- வரகு அரிசி - 2 கப்
- பாசி பருப்பு - 1 கப்
- மிளகு - 2 டீஸ்பூன்
- சீரகம் - 2 டீஸ்பூன்
- இஞ்சு - சிறிதளவு
- கருவேப்பிலை - 2 கொத்து
- பெருங்காயம் - 1 1/2 டீஸ்பூன்
- நெய் - 1 டீஸ்பூன்
- முந்திரி - 10
- எண்ணெய் - 1 குழிக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வரகரிசி, பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி 1: 4 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 3 முதல் 4 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
- பிறகு வாணலியில் எண்ணெய் காய வைத்து, அதில் மிளகு, சீரகம்,முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை தாளித்து , வரகு பொங்கலில் சேர்க்கவும்.
- சாதத்தை நன்கு மசித்து சிறிது நெய் ஊற்றி பறி மாறவும்.
- சுவையான சத்து நிறைந்த வரகரிசி பொங்கல் தயார்.
Friday, September 27, 2019
மறந்தும், கடந்தும், மறைந்தும் போன உணவுகள்
மறந்தும், கடந்தும், மறைந்தும் போன உணவுகள்
வணக்கம்,
- அன்பர்களே இதற்கு முந்தைய நாட்களில் நாம் சிறு தானிய உணவுகளான தினை, சாமை இரண்டின் உணவு முறைகளை பார்த்தோம்.
- இது போன்ற நமது பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டதால் தான் இன்றும் நம் முன்னோர்கள்! நமது தாத்தா, பாட்டிகள் 90 - 95 வயது வரையிலும், எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.
- அப்பேர் பட்ட உணவுகளை விட்டு விட்டு, நம் இளைய தலைமுறைக்கு நாம் அறிமுக படுத்தும் உணவு என்ன?
- பீஸா, பர்கர் போன்ற உடலுக்கு தீங்கை தரக்கூடிய பண்ணாட்டு உணவு முறைகளை உண்பதற்கு பழக்க படுத்துகிறோம்.
- இதனால் நம் பிள்ளைகளின் எதிர்கால, ஆரோக்கியமான வாழ்க்கையை நாமே கெடுத்துவிடுகிறோம்.
- நம் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில், நோய்கள் அற்ற ஆரோக்கியமன வாழ்கையை அமைத்து தருவது நமது கடமை அல்லவோ!
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
- நாம் பெரிதாக எதும் செய்ய வேண்டியது இல்லை.
- நம் முன்னோர்கள் பயன்படுத்திய, நமது பாரம்பரியமான உணவு முறைகளை நாம் பயன்படுத்தினாலே போதுமானது.
- இந்த தொகுப்பில் இன்னும் பல சிறுதானிய உணவுகளை பதிவேற்றம் செய்ய உள்ளோம்.
- இதனை, பார்த்து சிறு தானிய உணவுகளை சமைத்து கொடுத்து, நமது பாரம்பரிய உணவு முறைகளை நம் எதிர் கால சந்ததியருக்கு பழக்க படுத்துவோம்.
- தினம் தோறும் சமைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, வாரத்தில் ஒரு முறை ஒரு சிறுதானிய உணவை சமைத்து கொடுக்கலாம் அல்லவ.
- சிறுதானியத்தை நம் உணவில் சேர்த்து கொண்டு, ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் வாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)