தேவையான பொருள்கள் :
- சாமை அரிசி - 1 கப்
- பயத்தம் பருப்பு - 1/2 கப்
- நெய் - 2 டீஸ்புன்
- கல்கண்டு - 3/4 கப்
- திராட்சை - 10
- முந்திரி - 10
- பால் - 2 கப்
- தண்ணீர் - 2 கப்
செய்முறை :
- பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
- சாமை அரிசியையும், பருப்பையும் கழுவி குக்கரில் 6 விசில் வேகவிடவும்.( பாலும், தண்ணீரும் சம அளவு சேர்த்து கொள்ளலாம்.)
- கல்கண்டை மிக்சியில் பொடித்து வைக்கவும்.
- கடாயில் நெய் காய வைத்து திராட்சை, முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும்.
- சாமை சாதத்துடன் கல்கண்டு பொடியைப் போட்டு நன்கு கிளறவும்.
- முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
- தேவைப்பட்டால் இன்னும் சிறிது நெய் சேர்க்கவும்.
- சுவையான சத்து நிறைந்த சாமை கல்கண்டு பாயாசம் தயார்.