Monday, September 30, 2019

வரகு தக்காளி சாதம்

                                            






தேவையான பொருள்கள்:


  1. வரகரிசி                              -          1 கப் 
  2. வெங்காயம்                       -          2 பெரியது 
  3. தக்காளி                               -           2 
  4. பச்சை மிளகாய்                -           2
  5. கடுகு,உளுந்து                    -            1 டீஸ்பூன் 
  6. கருவேப்பிலை                  -            2 கொத்து 
  7. இஞ்சி, பூண்டு  பேஸ்ட்   -           1 டீஸ்பூன் 
  8. மிளகாய் தூள்                    -            2 டீஸ்பூன் 
  9. மல்லி தூள்                        -             3 டீஸ்பூன் 
  10. மஞ்சள் தூள்                      -            1/4 டீஸ்பூன் 
  11. உப்பு                                     -            தேவையான அளவு 
  12. எண்ணெய்                         -           1 குழி கரண்டி 
  13. நெய்                                    -           4  டீஸ்பூன் 



செய்முறை:

  • ஒரு கப் வரகு அரிசியை 2:2 1/2 அளவில் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வேகா வைத்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும்  கடுகு,உளுந்து, கருவேப்பிலை, பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு இஞ்சி,பூண்டு  பேஸ்ட் போட்டு 2 நிமிடம் வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • மசாலாவை ( மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்) போட்டு எண்ணெய் நன்கு தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • பிறகு 1 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதித்து தொக்கு பதம் வரும் வரை வதக்கி இறக்கவும்.
  • இப்போது தக்காளி தொகை வடித்த வரகு சாதத்தில் கொட்டி சாதம் உடையவள் கிளறி சிறிது மல்லி தழை தூவி பரிமாறவும்.
  • சுவையான, சத்து நிறைந்த வரகு தக்காளி சாதம் தயார். 


No comments:

Post a Comment