தேவையான பொருள்கள்:
- வரகரிசி - 1 கப்
- வெங்காயம் - 2 பெரியது
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 2
- கடுகு,உளுந்து - 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை - 2 கொத்து
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மல்லி தூள் - 3 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 குழி கரண்டி
- நெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
- ஒரு கப் வரகு அரிசியை 2:2 1/2 அளவில் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வேகா வைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுந்து, கருவேப்பிலை, பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பிறகு இஞ்சி,பூண்டு பேஸ்ட் போட்டு 2 நிமிடம் வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- மசாலாவை ( மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்) போட்டு எண்ணெய் நன்கு தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- பிறகு 1 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதித்து தொக்கு பதம் வரும் வரை வதக்கி இறக்கவும்.
- இப்போது தக்காளி தொகை வடித்த வரகு சாதத்தில் கொட்டி சாதம் உடையவள் கிளறி சிறிது மல்லி தழை தூவி பரிமாறவும்.
- சுவையான, சத்து நிறைந்த வரகு தக்காளி சாதம் தயார்.
No comments:
Post a Comment