தேவையான பொருள்கள்:
- வரகரிசி - 2 கப்
- கேரட்,பட்டாணி,பீன்ஸ் - 1/2 கப்
- காளிஃபிளவர், உருளை - 1/2 கப்
- பச்சை மிளகாய் - 2
- பெரிய வெங்காயம் - 1/2 கப் ( நீளமாக நறுக்கியது)
- தக்காளி - 1/4 கப்
- எலுமிச்சை ஜூஸ் - 1 டேபுள் ஸ்பூன்
- எண்ணெய் - 1 குழி கரண்டி
- நெய் - 4 டீஸ்பூன்
- மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- தயிர் - 1 டேபுள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 1:2
தாளிப்பு பொருள்கள் :
- பட்டை - 1
- கிராம்பு - 3
- பிரிஞ்சி இலை - 1
- அன்னாசி பூ - 1
- புதினா - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டேபுள் ஸ்பூன்
செய்முறை:
- வரகரிசியைக் கழுவி 1/2 நேரம் ஊறவைக்கவும்.
- அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயும், நெய்யும் சேர்த்து காயவிடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் தாளிப்பு பொருள்களை ( பட்டை, கிராம்பு,பிரிஞ்சி இலை) போடவும்.
- பிறகு பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதக்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் , புதினா போட்டு வதக்கவும்.
- பிறகு தக்காளி போட்டு சிறிது நேரம் வதக்கியுடன், வெட்டி வைத்து உள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.
- காய்கள் நன்கு வதங்கியதும் உப்பு, மசாலா பொருள்களை ( மிளகாய் தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா ) போட்டு வதக்கவும்.
- தயிர் சேர்த்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- வதக்கிய காய்களில் தண்ணீர் (1:2) சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- தண்ணீர் நன்கு கொதித்ததும் எலுமிச்சை பழச்சாறும், ஊற வைத்த வரகு அரிசியையும் சேர்த்து மூடி போட்டு,அடுப்பை சிமில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.
- பிறகு முடியை திறந்து மீதம் உள்ள நெய் சேர்த்து சாதம் உடையாமல் கிளறி 5 நிமிடம் வேகவிடவும்.
- இப்போது சாதம் 3/4 பதம் வெந்து இருக்கும். அடுப்பை அனைத்து விடவும்.
தம் போடும்முறை:
- பாத்திரத்தின் வாயை ஒரு துணியில் கட்டி அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரி தணல் போடலாம்.
- எரி தணல் கிடைக்காவிட்டால் நன்றாக கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்த தட்டின் மேல் வைக்கலாம்.
- இல்லை என்றால் சூடாக உள்ள குக்கரை கூட வைக்கலாம்.
- அதிக பட்சம் 10 நிமிடமே போதும்.
- இறுதியாக பிரியாணியை சிறிது நெய் விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
- சுவையான, சத்து நிறைந்த வரகரிசி பிரியாணி தயார்.
No comments:
Post a Comment