தேவையான பொருள்கள்:
- வரகு அரிசி - 2 கப்
- பாசி பருப்பு - 1 கப்
- மிளகு - 2 டீஸ்பூன்
- சீரகம் - 2 டீஸ்பூன்
- இஞ்சு - சிறிதளவு
- கருவேப்பிலை - 2 கொத்து
- பெருங்காயம் - 1 1/2 டீஸ்பூன்
- நெய் - 1 டீஸ்பூன்
- முந்திரி - 10
- எண்ணெய் - 1 குழிக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வரகரிசி, பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி 1: 4 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 3 முதல் 4 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
- பிறகு வாணலியில் எண்ணெய் காய வைத்து, அதில் மிளகு, சீரகம்,முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை தாளித்து , வரகு பொங்கலில் சேர்க்கவும்.
- சாதத்தை நன்கு மசித்து சிறிது நெய் ஊற்றி பறி மாறவும்.
- சுவையான சத்து நிறைந்த வரகரிசி பொங்கல் தயார்.