வரகரிசி பணியாரம்
தேவையான பொருள்கள் :
- வரகரிசி - 1ஆழாக்கு ( 200 கிராம்)
- உளுந்தம் பருப்பு - 3/4 ஆழாக்கு ( 75 கிராம் )
- எண்ணெய் - தேவையான அளவு
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- தேங்காய் - ஒரு துண்டு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்த மல்லி , உப்பு , பச்சை மிளகாய் - தேவையான அளவு
- கருப்பட்டி (அ ) வெல்லம் - தேவையான அளவு
- ஏலக்காய் - 4
செய்முறை :
- வரகரிசி , உளுந்து , வெந்தயம் மூன்றையும் இட்லி மாவுக்கு அரைப்பது போல கழுவி ஊறவைத்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
- அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
- பிறகு புளித்த மாவில் தேவையான அளவு எடுத்து வெல்லம் அல்லது கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடித்து மாவுடன் கலந்து கொள்ளவும்.
- பிறகு மாவுடன் இடித்த ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- இப்போது அடுப்பில் பணியார கல்லை வைத்து கல் சூடானதும் குழிகளில் எண்ணெய் விட்டு மாவை விட்டு நன்கு சிவந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் சிவக்க வேகா னைத்து எடுக்கவும்.
- சுவையான இனிப்பு வரகரிசி பணியாரம் தயார்.
கார பணியாரம்:
- ஒரு கடாயில் தாளிப்புக்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு , உளுந்தம் பருப்பு , கறிவேப்பிலை ,பச்சை மிளகாய் , இஞ்சி , வெங்காயம் , தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- இப்போது தேவையான அளவு மாவு எடுத்து அதனுடன் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கலக்கி கொள்ளவும்.
- பணியார கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் சிக்க வேக வைத்து எடுக்கவும்.
- சூடான , சுவையான வரகரிசி பணியாரம் தயார் .
முக்கிய குறிப்பு :
- மாவை ஆட்டி கரைக்கும் போது பாதி அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- ஏனென்றால் இனிப்பு பணியாரம் செய்யும் பொது உப்பு குறைவாக இருக்க வேண்டும்.
- கார பணியாரத்துக்கு வெங்காயம் வதக்கும் போது தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளவும்.