தேவையான பொருட்கள் :
1.வெள்ளை சோளம் - 1 கப்
2. இட்லி அரிசி (அ) புழுங்கல் அரிசி - 1\2 கப்
3. பச்சரிசி - 1\2 கப்
4. உளுந்து - 1\2 கப்
5. வெந்தயம் - 1 ஸ்பூன்
செய்முறைகள் :
* வெள்ளை சோளம் , இட்லி அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
* வெந்தயம் , உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளலாம்.
* இப்போது இட்லி மாவு அரைப்பது போல அரைத்துஅரைத்து உப்பு சேர்த்து கரைத்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க விடவும்.
* முதல் நாள் இரவு மாவு அரைத்து மறுநாள் காலை பணியாரம் செய்யலாம்.
* இனிப்பு பணியாரம் விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய் பூ,ஏலக்காய் சேர்த்து கலந்து பணியாரம் சுடலாம்.
*கார பணியாரம் விரும்புபவர்கள் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் சிறிது கடுகு , உளுந்தம் பருப்பு , கடலை பருப்பு , பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை , இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி மாவுடன் சேர்த்து கலந்து பணியாரம் சுடலாம்.
* கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை விட்டு இருபுறமும் திருப்பி போட்டு நன்கு சிவக்க விட்டு எடுக்கவும்.
* இப்போது சூடான கமகமக்கும் சோள இனிப்பு மற்றும் கார பணியாரம் தயார்.
* இதனுடன் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
செய்முறைகள் :
* வெள்ளை சோளம் , இட்லி அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
* வெந்தயம் , உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளலாம்.
* இப்போது இட்லி மாவு அரைப்பது போல அரைத்துஅரைத்து உப்பு சேர்த்து கரைத்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க விடவும்.
* முதல் நாள் இரவு மாவு அரைத்து மறுநாள் காலை பணியாரம் செய்யலாம்.
* இனிப்பு பணியாரம் விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய் பூ,ஏலக்காய் சேர்த்து கலந்து பணியாரம் சுடலாம்.
*கார பணியாரம் விரும்புபவர்கள் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் சிறிது கடுகு , உளுந்தம் பருப்பு , கடலை பருப்பு , பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை , இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி மாவுடன் சேர்த்து கலந்து பணியாரம் சுடலாம்.
* கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை விட்டு இருபுறமும் திருப்பி போட்டு நன்கு சிவக்க விட்டு எடுக்கவும்.
* இப்போது சூடான கமகமக்கும் சோள இனிப்பு மற்றும் கார பணியாரம் தயார்.
* இதனுடன் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
தேவையான
ஜிஹ்
பிபி