தேவையான பொருள்கள்:
- கம்பு மாவு - 1 கப்
- பச்சைப்பயிறு மாவு - 1/4 கப்
- பேரிச்சம்பழம் - 5
- முந்திரி - 5
- கருப்பட்டி - 1/2 கப்
- வறுத்து பொடித்த எள் - 1 டீஸ்பூன்
- நெய் - 1 டீஸ்பூன்
- பால் - தேவையான அளவு
- உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
- அடுப்பில் வெறும் கடாயில் கம்பு மாவு, பச்சைப்பயிறு மாவு இரெண்டையும்தனி தனியே வாசம் வரும் வரை அடி பிடிக்காமல் வறுத்து கொள்ளவும்.
- வறுத்த மாவை மிக்சியில் பொடித்த கருப்பட்டியுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.
- கடாயில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி,பொடியாக நறுக்கிய பேரிச்சைப்பழத்தை சேர்த்து வறுத்து மாவில் கொட்டவும்.
- அத்துடன் பொடித்த எள், உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
- பாலை காய்ச்சி பொறுக்கும் சூட்டில் மாவில் கொஞ்சமாக தெளித்து லட்டு பிடிக்கவும்.
- இதனை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
- பாலுக்கு பதில் இன்னும் கோசம் நெய் சேர்த்து லட்டு பிடித்தல் 20 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
- சுவையான, சத்து நிறைந்த குளிர்ச்சி தர கூடிய கம்பு லட்டு தயார்.