Thursday, December 28, 2017

நம் தமிழ் பெண்கள் காதுகளில் (கம்மல்) தோடு போடுவதன் பயன்கள்

              காது குத்துவதால் ஏற்படும் நன்மைகள் 








  • பெண்கள் காது மற்றும் மூக்கு பகுதியில் துலைகள் இடுவதால் உடலின் நரம்பு பகுதியில் உள்ள கெட்ட வாய்வுக்கள் அந்த துலைகள் வலியே வெளியேறுகிறது.
  • அதில் தங்கத்தால் ஆன மூக்குத்தி மற்றும் தோடு போடுவதன் மூலம் தங்கம் மானது நம் உடலில் உள்ள வெப்பத்தை எடுத்து தன்னுள் வைத்து கொள்கிறது.
  • காது குத்துவதன் மூலம் மூலைக்கு வரகூடிய 18 வகையான நோய்களை தடுக்கலாம் என அக்கு பஞ்சர் முறையில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
  • காது குத்துவதால் ஜூரண சக்தி அதிகம் ஆகுமாம்.
  • கல்லீரலில் ஏற்பட கூடிய பிரச்சனையை தடுக்கிறதாம்.
  • காது பகுதியில் துலை இடுவதால் முடி நன்கு வளரசெய்யுமாம்.
  • ஆகவே தான் நம் முன்னோர்கள் காது குத்தும் பழக்கத்தை கொண்டு வந்தார்களாம்.


நம் தமிழ் பெண்கள் மூக்குத்தி அணிவதன் அவசியம்


பெண்கள் மூக்குத்தி அணிவதன் அவசியம் 





  • பெண்ணின் மூக்கு காதுகளில் துலை இடுவதால் ஆரோக்கியமாக இருக்கலாம் என ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றது.

  • அப்படி துலை இட்ட இடத்தில் தங்கம் மற்றும் நவரத்தினங்களை அணிவதால் மாதம் தோறும் மற்றும் மகபேறு காலங்களிளும் ஏற்பட கூடிய இழந்த சக்தியை ஈடு செய்யும் என வைத்திய நூல்கள் கூறுகிறது.

  • தியானத்திற்க்கும் மற்றும் மண தடுமாற்றம் இல்லாமல் இருக்கவும் மூக்குத்தி உதவுகிறது என ஞானிகளும் ரிசிகளும் கூறுகின்றனர்.

  • பெண்கள் மூக்குத்தி அணிவதால் முகத்தில் லெட்சுமி கடாசம் இருக்கும் என நம் மூதாதையர்கள் கூறினார்கள்.


இதற்கான உண்மை காரணம் பின்வருவன:

  •  பார் கடலை கடைந்த பொழுது அதில் கிடைத்த பொருட்களுடன் மூதேவியும்அதன் பின் லெட்சுமி தேவியும் வந்ததாக கூறுவார்கள். முதலில் மூதேவி வந்ததால் அவளை அக்கா என்றும் இரண்டாவதாக லெட்சுமி தேவி வந்ததால் லெட்சுமியை தங்கை என்றும் கூறுவார்கள்.
  • லெட்சுமி சென்ற இடம் சீறும் சிறப்புமாகவும் மூதேவி சென்ற இடம் சீர் குலைந்தும் இருந்தது. இதனை அறிந்த மூதேவி சிவ பெருமானிடம் சென்று என்னை யாரும் விரும்புவது இல்லை எனவும் தன்னை மதிக்கக்கூடிய இடத்தில் நான் இருக்க விரும்புகிறேன் என கேட்டாறாம். கேட்டதை கொடுக்கும் மணம் கொண்ட சிவபெருமான் மூதேவியிடம் நீ எங்கு இருக்க விரும்புகிறாய் என கேட்டார்.
  • மூதேவி எல்லோராலும் மதிக்கப்பட கூடிய பசுவின் முகத்திலும்பெண்ணின் மூக்கிலும்  ஆணின் இடுப்பிலும் இருக்க விரும்புவதாக கூறினால். அவள் கேட்டு கொண்ட படியே வரமும் தரப்பட்டது.
  • இதனை அறிந்த அந்த மூவரும் சிவ பெருமானிடம் சென்று எல்லோராலும் போற்றப்படும் எங்களிடம் மூதேவி இருந்தால் எங்களை எப்படி எல்லோரும் விரும்புவார்கள் என கேட்டனர்.
  • அதற்கு சிவபெருமான் உங்களிடம் மூதேவி வராமல் இருக்க நான் ஒரு வழி சொல்கிறேன் என்று கூறினார்.
  • ஆண்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து செய்ய கூடிய எந்த செயலிலும் மூதேவி வரமாட்டால் எனவும். 
  • சிம்மாசனத்தில் அமராமல் செய்யும் செயலில் மூதேவி வாசம் கொள்வாள் என்றும் கூறினாறாம்.
  • பசுவிற்க்கு முகத்தில் மூதேவி இருப்பதால் பசுவின் பின் புறம் லெட்சுமி குடி கொண்டு இருப்பாள். 
  • பசுவின் கோமியத்தை கொண்டு பூஜை செய்ய வீட்டில் லெட்சுமி குடி கொள்வாள் எனவும.
  •  மேலும் எந்த விழங்குக்கும் இல்லாத அற்புதம் அதாவது உனது உடல் முழுவதும் அனைத்து கடவுள்களும் உறைய கூடிய இடமாகவும்.
  •  உன் இடத்தில் வர கூடிய பால், தயிர், நெய் என அனைத்தும் இறைவழிபாட்டுக்கும். மனிதனின் உடல் ஆரோக்கித்துக்கம் பயன்படகூடியதாக இருக்கும் எனவும் கூறினாறாம்.
  • பெண்களுக்கு மூக்கில் மூதேவி இல்லாமல் இருக்க லெட்சுமி தேவியின் அம்சமான நவரத்தினம் அல்லது தங்கத்தால் ஆன மூக்குத்தியை அணிவதால் மூதேவி வரமாட்டால் என்றும் கூறினார்.
  •  இவ்வாறு மூக்குத்தி அணிவதால் லெட்சுமி தேவி நித்தியவாசம் செய்வதோடு சுமங்கலி பூஜையும் செய்வார்கள் என கூறி வரம் அளித்ததாக ஆன்மீக தகவல் கூறுகிறதாம்.
  • ஆகையால் பெண்கள் மூக்குத்தி அணிவது அவசியமானதாகும். 


Wednesday, December 27, 2017

சுமங்கலி பெண்கள் குங்குமம் இட்டு கொள்வது மிகவும் அழகு

                         சுமங்கலி பெண்கள் குங்குமம் இடுவதன் சிறப்பு 


Related image



  • சுமங்கலி பெண்களின் தலைவகுட்டுக்கு சீமந்தபிரதேசம் என்ற பெயர் உண்டாம்.


  • பெண்களின் சீமந்த பிரதேசம் எனப்படும் இந்த இடம் ஸ்ரீ மகா லெட்சுமியின் இருப்பிடமாகும்.


  • சுமங்கலி பெண்களின் சக்தியானது குங்குமத்தில் இருக்கிறதாம்.


  • ஸ்ரீ அம்பிகையின் வகுட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கிறதாம்.


  • வீட்டிற்கு வர கூடிய சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கொடுப்பது நம் தமிழ் வழக்கம்.


  • அவ்வாறு கொடுக்கும் முன் பெண்கள் தான் குங்குமம் இட்ட பிறகே பிறருக்கு கொடுக்க வேண்டுமாம்.


  • இவ்வாறு குங்குமம் கொடுப்பதால் குங்குமம் கொடுப்பவர்  பெறுபவர் என இருவறுக்கும் பலன் அதிகம் கிடைக்குமாம்.


  • தெய்வீக தன்மை கொண்ட குங்குமத்தை நாம் இட்டு கொள்வதால் உடலில் குளிர்ச்சி ஏற்படுமாம்.


  • அது மட்டும் இன்றி குங்குமம் இட்டு கொண்டு இருக்கும் எவரையும் பார்பவருக்கு வசியம் செய்யும் எண்ணம் வராதாம்.


  • குங்குமம் இட்டு கொள்வதால் மனதில் நல்ல எண்ணங்கள் (positive thinking) தோன்றுமாம்.


  • குங்குமம் இட்டு கொள்வதால் சுய கட்டுபாடு (மனதை கட்டுக்குள் வைக்க) செய்ய முடியுமாம்.


  • அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை குறிக்குமாம். எனவே பெண்களின்  திருமண புடவையானது அரக்கு நிறத்தில் இருப்பது மிக சிறப்பாம்.


  • ஆண்கள் தன் இரு புருவங்களையும் இணைத்தார் போல் குங்குமம் இடவேண்டுமாம்.


  • இவ்வாறு இட்டு கொள்வது அவர்களின் தன் நம்பிக்கையை குறிக்குமாம்.  

   

Tuesday, December 26, 2017

மலர்களின் மருத்துவ பயன்பாடுகள் (flower's medical useage)

                                    மலர்களின் மருத்துவ பயன்கள்

Image result for flowers image



பெண்கள் தலையில் பூ வைப்பதன் அவசியம்:


  • பூக்கள் இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரம். 
  • பொதுவாக பூக்களுக்கு இயற்கையாக பல நல்ல குணங்கள் உள்ளன.
  •  பல வகையான பூக்கள் மருத்துவத்துக்கும், வாசனை திரவியங்கள் தயார் செய்வதற்க்கும் பயன்படுகின்றன.
  •  ஒரு சில வகையான பூக்களை கடவுள்களுக்கு சமர்ப்பிக்கிறோம். 
  • சிலவகையான பூக்களை நம் பெண்கள் தலையில் சூட்டி கொள்கின்றனர்.

 பூக்கள் என்ன மருத்துவ பயன் தருகிறது என்று பார்ப்போம்:
  • தாளம் பூ நன்கு தூங்குவதற்க்கு பயன்படுவதோடு, உடல் சோர்வையும்  சரிசெய்யும். 
  • நல்ல மணம் வீசும் தன்மை உள்ளது.
  • வில்வ பூ சுவாசத்தை சீராக்கும், காச நோயை சரிசெய்யும்.
  • மகிலம் பூ தலை வலி, பல் சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்.
  • சித்தகத்தி பூ மூளை சுருசுருபாக இருக்கும், தலைவலியை குறைக்கும்.
  • தாமரை பூ தலை அரிச்சல், தலை சுற்றல், மண உலைச்சலை நீக்கி மண அமைதிக்கு வலிவகுக்கும். 
  • தூக்கமின்மையை நீக்கி நன்கு தூக்குவதற்க்கு பயன்படுகிறது.
  • கனகாமர பூ தலை வலி மற்றும் தலை பாரத்தை சரிசெய்யும்.
  • செம்பருத்தி பூ உடல் சூட்டை குறைக்கும், தலைமுடி சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யும்.
  • ரோஜா பூ கண் நோய், தலை சுற்றலை சரி செய்யும்.
  • செம்பக பூ பார்வை திறனை அதிகரிக்கும், வாதத்தை போக்கும்.
  • மல்லிகை மண அமைதி, கண்களுக்கு குளிர்ச்சி தரும்.
  • தாலம், மகிலம், ரோஜா, செம்பருத்தி பூக்கள் வாதம் மற்றும் கபத்தை நீக்க கூடியவை.

Monday, December 25, 2017

பெண்களின் முக்கியமான பாரம்பரிய முறைகள் (women's important traditonal meeathods)

பெண்கள் தெறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆன்மீக விசியங்கள்:



Image result for gods images


  •  தாலி கொடியானது தங்கத்தில் அணிந்தாலும் மாங்கல்யத்தை மஞ்சள்

கயிற்றில் கோர்த்து அணிய வேண்டும்.

  •  கற்பமாக இருக்கும் பெண்கள் உக்ர தெய்வங்கள் (காளி, சூலி, பத்ரகளி) இருக்கும் கோவில்களுக்கு செல்ல கூடாது.


  •  கோவில்களில் தெய்வத்தை வணங்கும் பொழுது பெண்கள் மண்டியிட்டு இரு பாதங்களையும் ஒன்றாக வைத்து, நெற்றி பகுதி ஆனது பூமியில் படுமாறு வணங்க வேண்டும்.


  • கோவில்களில் பூஜையில் வைத்து தரகூடிய துளசியை தலையில் வைக்க கூடாது.


  •  சுமங்கலி பெண்கள்  தலைக்கு குளிக்கும் முன் சிறிது மஞ்சளை முகத்தில் தெய்த்து விட்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.


  • பெண்கள் கோவில்களில் அங்கபிரதசனம் செய்ய கூடாது. 
  • ஏனெனில் பெண்களின் மார்பு பகுதியானது பூமியில் பட கூடாது.


  • கோலம் போடும் பொழுது தெற்கு திசையை பார்த்து கோலம் போட கூடாது.


  • அம்மாவாசை அன்று வாசலில் கோலம் போட கூடாது.
  •  விசேச நாட்களிலும்,வெள்ளி கிழமைகளிலும் வீட்டில் பாகற்காய் சமைக்க கூடாது. 
  • அப்படி செய்தால் பாவம் வந்து சேருமாம்.


  • கன்னி பெண்கள் சாந்து பொட்டும், திருமணம் ஆன பெண்கள் குங்குமம் வைத்து கொள்ளவேண்டும்.


  •  கிழக்கு திசையை பார்த்து நின்று கொண்டு திருமணம் ஆன பெண்கள்  புருவத்தின் மத்தியிலும், நெற்றியின் உச்சியிலும், தாலியிலும் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். 
  • கன்னி பெண்கள் இவ்வாறு செய்ய கூடாது.
  • திருமணம் ஆன பெண்கள் இரு பாதத்திலும் ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். 
  • கட்டை விரலுக்கு அருகில் உள்ள விரலில் மட்டுமே அணிய வேண்டும். 



  • மற்ற விரல்களில் மெட்டி அணிந்தால் கணவனுக்கு உடல் நல கோளாறுகளும், கணவனின் வளர்ச்சியில் தடைகளும் ஏற்படும்.



Saturday, December 23, 2017

tamil galaxy

தமிழ் கேலக்ஸி,

ஒரு வீட்டில் பெண் என்ற ஒருவள் இல்லை என்றால் அந்த வீடு வீடாக இருப்பது கிடையாது. இது அணைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு பெண் தனது வீட்டின் நன்மை, தீமைகளை பற்றி ஆண்களை விட அதிகம் சிந்தித்து கொண்டே இருப்பாள். (ஆண்களுக்கு வீட்டை பற்றிய சிந்தனை இல்லை என சொல்ல விலை பொதுவாக ஆண்களின் எண்ணங்கள் வீட்டை மட்டுமே நினைப்பது கிடையாது).

ஆகவே பெண்களான நாம் நம் வீட்டை அழகாகவும், தூய்மையாகவும் வைத்துகொள்ள விரும்புகிறோம். நம் வீட்டில் நல்ல எண்ணங்கள் அதாவது ஆங்கிலத்தில் ( Positive thinking ) என சொல்வார்கள். அப்படி என்றால் என்ன அதை எப்படி நம் வீட்டிற்கு வரவழைப்பது  என்றும்,  பல ஆன்மீக தகவல்கள் பற்றியும், நாம் அணிய கூடிய அணிகலன்களின் நன்மைகளையும், அதனை அணிவதற்கான அவசியம் பற்றியும் இன்னும் பல சுவாரசியமான பல தகவல்களையும் பார்க்க போகிறோம்.

 எனக்கு தெரிந்த இந்த தகவலை tamil galaxy மூலமாக  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க  மகிழ்ச்சி.

அனைவரும் பார்த்து  பயன் பெருங்கள்.பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

                                                                                                      இப்படிக்கு,

                                                                                                  உங்கள் தோழி