Thursday, October 10, 2019

கம்பங்கூழ்






தேவையான பொருள்கள்: 


  1. கம்பு                                                                  -          1 கப் 
  2. மோர்                                                                -          2 கப் 
  3. உப்பு                                                                  -          தேவையான அளவு 
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம்            -           1 கைப்பிடி
  5. மோர் மிளகாய்                                             -           தேவையான அளவு 
  6. மாங்காய் (மிளகாய்,உப்பு சேர்த்தது )     -             தேவையான அளவு 
  7. வடகம் ( கலர் )                                             -           தேவையான அளவு   

செய்முறை:
  • கம்பு குருணையை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • ஊறிய கம்பை 1:3 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு சேர்த்து  குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.
  • விசில் இறங்கியதும் வேகவைத்துள்ள கம்பை எடுத்து கொள்ளவும்.
  • அதனுடன் மோர் சேர்த்து நீர்க்க கரைத்து,அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு சரி பார்த்து பரிமாறவும்.
  • இப்போது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய,சத்தான கம்பங்கூழ்  தயார்.
  • இதனை  மோர் மிளகாய், வடகம், சிறிதாக நறுக்கிய மாங்காயை மிளகாய் தூள் உப்பு சேர்த்து ஊறவைத்து   இதனுடன் பரிமாறினாள் சுவை அதிகம்.  
  • மீதம் உள்ள கம்பங்கூழை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். 
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து உருண்டை மூழ்கும்  மாறு வைக்கவும்.
  • இவ்வாறு வைத்துள்ள உருண்டைகள் 4-5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். (திறந்த வெளியில் வைத்தால் தண்ணீரை தினமும் மாற்றிவிட வேண்டும்)
  • குளிர் சாதன பெட்டியில் வைத்தால் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.