தேவையான பொருள்கள்:
- கம்பு - 1 கப்
- மோர் - 2 கப்
- உப்பு - தேவையான அளவு
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கைப்பிடி
- மோர் மிளகாய் - தேவையான அளவு
- மாங்காய் (மிளகாய்,உப்பு சேர்த்தது ) - தேவையான அளவு
- வடகம் ( கலர் ) - தேவையான அளவு
செய்முறை:
- கம்பு குருணையை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- ஊறிய கம்பை 1:3 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.
- விசில் இறங்கியதும் வேகவைத்துள்ள கம்பை எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் மோர் சேர்த்து நீர்க்க கரைத்து,அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு சரி பார்த்து பரிமாறவும்.
- இப்போது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய,சத்தான கம்பங்கூழ் தயார்.
- இதனை மோர் மிளகாய், வடகம், சிறிதாக நறுக்கிய மாங்காயை மிளகாய் தூள் உப்பு சேர்த்து ஊறவைத்து இதனுடன் பரிமாறினாள் சுவை அதிகம்.
- மீதம் உள்ள கம்பங்கூழை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து உருண்டை மூழ்கும் மாறு வைக்கவும்.
- இவ்வாறு வைத்துள்ள உருண்டைகள் 4-5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். (திறந்த வெளியில் வைத்தால் தண்ணீரை தினமும் மாற்றிவிட வேண்டும்)
- குளிர் சாதன பெட்டியில் வைத்தால் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.