தேவையான பொருள்கள்:
- கம்பரிசி - 1 கப்
- கடலை பருப்பு - 1/2 கப்
- வெல்லம் (கருப்பட்டி ) - 1/2 கப்
- நெய் - 2 டீஸ்பூன்
- முந்திரி - 10
- ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - 1 சிட்டிகை
- வாழை இலை - 5
செய்முறை:
மேல் மாவுக்கு,
- கம்பரிசியை கழுவி 3 மணி நேரம் ஊறவைத்து, மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்க்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவு,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கைவிடாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும்.
- மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டி இல்லாமல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
- மேல் மாவு தயார்.
பூரணம்,
- கடலைப்பருப்பை கழுவி குக்கரில் ஒருபோட்டு 1/2 கப் தண்ணீர் சேர்த்து 1 விசில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- விசில் இறங்கியதும் பருப்பை தண்ணீர் வடித்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து, அரைத்த கடலை மாவுடன் சேர்த்து கிளறி கொள்ளவும்.
- பிறகு அகிலாரிய மாவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
செய்முறை,
- வாழை இலையில் எண்ணெய் தடவி வெறும் தணலில் வாட்டி எடுத்த்து கொள்ளவும்.
- கம்பு மாவை உருண்டையாக (பூரி உருண்டை) உருட்டி வாட்டி வைத்துள்ள வாழை இலையில் வைத்து தட்டி கொள்ளவும்.
- தட்டிய மேல் மாவின் நடு பகுதியில் பூரணத்தை சேர்த்து இலையை இரண்டாக மூடி தட்டி கொள்ளவும்.
- எவ்வாறு அனைத்து மாவுகளையும் தயார் செய்து கொண்டு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சசேர்த்து கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் வாழை இலையில் தட்டி வைத்துள்ள அட்டையை வைத்து மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் வேகவிடவும்.
- 10 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து இலையில் உள்ள அட்டையை எடுத்து சூடாக பரிமாறவும்.
- சூடான, சுவையான, சத்து நிறைந்த ,உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய கம்பு இலை அடை தயார்.