Tuesday, October 8, 2019

கம்பு இலை அடை



தேவையான பொருள்கள்:


  1. கம்பரிசி                               -           1 கப் 
  2. கடலை பருப்பு                   -           1/2 கப் 
  3. வெல்லம் (கருப்பட்டி )    -           1/2 கப் 
  4. நெய்                                     -           2 டீஸ்பூன் 
  5. முந்திரி                               -           10 
  6. ஏலக்காய் தூள்                  -           1 டீஸ்பூன் 
  7. தேங்காய் துருவல்          -            1/4 கப் 
  8. எண்ணெய்                        -            1 டேபிள் ஸ்பூன் 
  9. உப்பு                                    -           1 சிட்டிகை 
  10. வாழை இலை                  -           5

செய்முறை:

மேல் மாவுக்கு,
  •  கம்பரிசியை கழுவி  3 மணி நேரம் ஊறவைத்து, மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்க்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவு,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கைவிடாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும்.
  • மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டி இல்லாமல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  • மேல் மாவு தயார்.
பூரணம்,
  • கடலைப்பருப்பை கழுவி குக்கரில் ஒருபோட்டு 1/2 கப் தண்ணீர் சேர்த்து 1 விசில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
  • விசில் இறங்கியதும் பருப்பை தண்ணீர் வடித்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து, அரைத்த கடலை மாவுடன் சேர்த்து கிளறி கொள்ளவும்.
  • பிறகு அகிலாரிய மாவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
செய்முறை,
  • வாழை  இலையில் எண்ணெய் தடவி வெறும் தணலில் வாட்டி எடுத்த்து கொள்ளவும்.
  • கம்பு மாவை உருண்டையாக (பூரி உருண்டை) உருட்டி வாட்டி வைத்துள்ள வாழை இலையில் வைத்து தட்டி கொள்ளவும்.
  • தட்டிய மேல் மாவின் நடு பகுதியில் பூரணத்தை சேர்த்து இலையை இரண்டாக மூடி  தட்டி கொள்ளவும்.
  • எவ்வாறு அனைத்து மாவுகளையும் தயார் செய்து கொண்டு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சசேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் வாழை இலையில் தட்டி வைத்துள்ள அட்டையை வைத்து மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் வேகவிடவும்.
  • 10 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து இலையில் உள்ள அட்டையை எடுத்து சூடாக பரிமாறவும்.
  • சூடான, சுவையான, சத்து நிறைந்த ,உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய கம்பு  இலை அடை தயார்.


கம்பு பருப்பு சாதம்

                                                 




தேவையான பொருள்கள்:


  1. கம்பரிசி             -     1 கப்
  2. து.பருப்பு            -      1/4 கப்
  3. பா.பருப்பு           -      1/4 கப் 
  4. தண்ணீர்            -      3 கப் 
  5. மஞ்சள் தூள்     -      1/4 டீஸ்பூன்   
  6. வெங்காயம்       -      1/2 கப்
  7. தக்காளி               -      1/2 கப் 
  8. உப்பு                     -     தேவையான அளவு


தாளிப்பு பொருள்கள் :
  1.   எண்ணெய்               -       2 டீஸ்பூன் 
  2. கடுகு                           -      1 டீஸ்பூன் 
  3. உளுந்தம் பருப்பு      -      1 டீஸ்பூன்
  4. கருவேப்பிலை         -      2 கொத்து 
  5. மல்லி தழை             -      1 கொத்து 
பொடித்து கொள்ள,
       ( மிளகு -  1 டீஸ்பூன் ,சீரகம் -  1டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2,  பூண்டு - 5 )

செய்முறை:
  • கம்பு,பருப்பு இரண்டையும் கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • மிளகு, சீரகம், வரமிளகாய் மூன்றையும் மிக்சியில் அரைத்து பொடி செய்து  கடைசியாக பூண்டையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று விட்டு எடுத்து கொள்ளவும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து மசித்து கொள்ளவும்.
  • பிறகு மசாலா பொருட்களை ( மஞ்சள், மிளகாய் தூள்)  சேர்த்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்த பொடியை சேர்த்து வதக்கம்.
  • மசாலா பச்சை வாசம் போனதும் ( கம்பு,பருப்பு சேர்த்து 1:2)என்ற அளவு  தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் நன்கு கொதிக்கும் பொது கழுவி ஊற வைத்த கம்பு,பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் உப்பு கரம் பார்த்து மல்லி தழை தூவி குக்கரை மூடி 5 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • சுவையான,சத்து நிறைந்த,உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய  கம்பு பருப்பு சத்தம் தயார். 
  • இதனை தயிர், தேங்காய் துருவல்,ஊறுகாயுடன் பரிமாறினால் சுவை அதிகமாக இருக்கும்.