Thursday, October 3, 2019

வரகரிசி இட்லி

                                               


 

தேவையான பொருள்கள்:


  1. வரகரிசி                       -              1 கப் 
  2. உ.பருப்பு                      -              1/4 கப் 
  3. வெந்தயம்                   -              1 டீஸ்பூன்
  4. உப்பு                              -              தேவையான அளவு  
செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் வரகரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி 5 மணி  நேரம்  ஊறவைத்து  கொள்ளவும்.
  • மற்றொரு  பாத்திரத்தில்  உ.பருப்பையும், வெந்தயம்  இரெண்டையும் தண்ணீர் ஊற்றி கழுவி 1 மணி நேரம்  ஊறவைத்து  கொள்ளவும்.   
  • ஊறவைத்த  அரிசியையும், பருப்பையும்  இட்லி  மாவு  பதத்திற்கு  அரைத்து   எடுத்து  கொள்ளவும்.
  • அரைத்த  மாவில்  தேவையான  அளவு  உப்பு  சேர்த்து  கரைத்து,8 மணி  நேரம்  புளிக்க  வைத்து  கொள்ளவும்.
  • 8 மணி  நேரம் களித்து  அடுப்பில் இட்லி  பாத்திரத்தை  வைத்து  தண்ணீர்  ஊற்றி  கொதிக்க  வைக்கவும்.
  • தண்ணீர்  கொதித்தவுடன்  புளித்த  மாவை  எடுத்து  இட்லி  தட்டில்  மாவை  ஊற்றி  இட்லி  பாத்திரத்தில்  வைத்து  5-10  நிமிடங்கள்  வேகவைத்து   கொள்ளவும்.
  • வேகவைத்த இட்லிகளை   சூடாக  பரிமாறவும்.
  • சூடான,சுவையான,சத்துநிறைந்த வரகரிசி  இட்லி தயார்.






   

No comments:

Post a Comment