சாமை அரிசி தம் பிரியாணி
தேவையான பொருள்கள் :
தேவையான பொருள்கள் :
- சமையரிசி - 2 கப்
- கேரட் - 1
- பட்டாணி - 1/4 கப்
- பீன்ஸ் - 4
- காளிஃபிளவர் - சிறிதளவு
- உருளைக்கிழங்கு - சிறியது 1
- பிரிய வெங்காயம் ( நீளமாக நறுக்கிய ) - 2
- தக்காளி ( பொடியாக நறுக்கியது ) - 1
- எலுமிச்சை பழ ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- நெய் - 50 கி
- எண்ணெய் - 1 குளிக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 டீஸ்புன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்புன்
- கரம்மசாலா - 1 டீஸ்புன்
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - 1:2
- உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு :
பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா
(இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும்.)
செய்முறை :
- சாமை அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயும், நெய்யுமாக பாதி ஊற்றி தாளிப்பு பொருள்களை போடவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு சேர்த்து கிளறி, காய்கறிகளை சேர்க்கவும்.
- 2mins வதங்கியதும் தக்காளியை சேர்த்து கிளறி மசிந்ததும், தயிர் சேர்த்து வதக்கவும்.
- பிறகு மசாலாவை போட்டு (கரம், மிளகாய்,மஞ்சள் ) நன்கு எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- வதக்கிய காய்களில் தண்ணீர் (1:2) சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- தண்ணீர் நன்கு கொதித்ததும் எலுமிச்சை பழச்சாறும், ஊற வைத்த சாமை அரிசியையும் சேர்த்து மூடி போட்டு,அடுப்பை சிமில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.
- பிறகு முடியை திறந்து மீதம் உள்ள நெய் சேர்த்து சாதம் உடையாமல் கிளறி 5 நிமிடம் வேகவிடவும்.
- இப்போது சாதம் 3/4 பதம் வெந்து இருக்கும். அடுப்பை அனைத்து விடவும்.
தம் போடும்முறை:
- பாத்திரத்தின் வாயை ஒரு துணியில் கட்டி அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரி தணல் போடலாம்.
- எரி தணல் கிடைக்காவிட்டால் நன்றாக கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்த தட்டின் மேல் வைக்கலாம்.
- இல்லை என்றால் சூடாக உள்ள குக்கரை கூட வைக்கலாம்.
- அதிக பட்சம் 10 நிமிடமே போதும்.
- இறுதியாக பிரியாணியை சிறிது நெய் விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
- சுவையான, சத்து நிறைந்த சாமை பிரியாணி தயார்.