Tuesday, October 8, 2019

கம்பு பருப்பு சாதம்

                                                 




தேவையான பொருள்கள்:


  1. கம்பரிசி             -     1 கப்
  2. து.பருப்பு            -      1/4 கப்
  3. பா.பருப்பு           -      1/4 கப் 
  4. தண்ணீர்            -      3 கப் 
  5. மஞ்சள் தூள்     -      1/4 டீஸ்பூன்   
  6. வெங்காயம்       -      1/2 கப்
  7. தக்காளி               -      1/2 கப் 
  8. உப்பு                     -     தேவையான அளவு


தாளிப்பு பொருள்கள் :
  1.   எண்ணெய்               -       2 டீஸ்பூன் 
  2. கடுகு                           -      1 டீஸ்பூன் 
  3. உளுந்தம் பருப்பு      -      1 டீஸ்பூன்
  4. கருவேப்பிலை         -      2 கொத்து 
  5. மல்லி தழை             -      1 கொத்து 
பொடித்து கொள்ள,
       ( மிளகு -  1 டீஸ்பூன் ,சீரகம் -  1டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2,  பூண்டு - 5 )

செய்முறை:
  • கம்பு,பருப்பு இரண்டையும் கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • மிளகு, சீரகம், வரமிளகாய் மூன்றையும் மிக்சியில் அரைத்து பொடி செய்து  கடைசியாக பூண்டையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று விட்டு எடுத்து கொள்ளவும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து மசித்து கொள்ளவும்.
  • பிறகு மசாலா பொருட்களை ( மஞ்சள், மிளகாய் தூள்)  சேர்த்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்த பொடியை சேர்த்து வதக்கம்.
  • மசாலா பச்சை வாசம் போனதும் ( கம்பு,பருப்பு சேர்த்து 1:2)என்ற அளவு  தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் நன்கு கொதிக்கும் பொது கழுவி ஊற வைத்த கம்பு,பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் உப்பு கரம் பார்த்து மல்லி தழை தூவி குக்கரை மூடி 5 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • சுவையான,சத்து நிறைந்த,உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய  கம்பு பருப்பு சத்தம் தயார். 
  • இதனை தயிர், தேங்காய் துருவல்,ஊறுகாயுடன் பரிமாறினால் சுவை அதிகமாக இருக்கும். 




No comments:

Post a Comment