தேவையான பொருள்கள்:
- கம்பரிசி - 1 கப்
- து.பருப்பு - 1/4 கப்
- பா.பருப்பு - 1/4 கப்
- தண்ணீர் - 3 கப்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- வெங்காயம் - 1/2 கப்
- தக்காளி - 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை - 2 கொத்து
- மல்லி தழை - 1 கொத்து
( மிளகு - 1 டீஸ்பூன் ,சீரகம் - 1டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, பூண்டு - 5 )
செய்முறை:
- கம்பு,பருப்பு இரண்டையும் கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- மிளகு, சீரகம், வரமிளகாய் மூன்றையும் மிக்சியில் அரைத்து பொடி செய்து கடைசியாக பூண்டையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று விட்டு எடுத்து கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து மசித்து கொள்ளவும்.
- பிறகு மசாலா பொருட்களை ( மஞ்சள், மிளகாய் தூள்) சேர்த்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்த பொடியை சேர்த்து வதக்கம்.
- மசாலா பச்சை வாசம் போனதும் ( கம்பு,பருப்பு சேர்த்து 1:2)என்ற அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- தண்ணீர் நன்கு கொதிக்கும் பொது கழுவி ஊற வைத்த கம்பு,பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் உப்பு கரம் பார்த்து மல்லி தழை தூவி குக்கரை மூடி 5 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
- சுவையான,சத்து நிறைந்த,உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கம்பு பருப்பு சத்தம் தயார்.
- இதனை தயிர், தேங்காய் துருவல்,ஊறுகாயுடன் பரிமாறினால் சுவை அதிகமாக இருக்கும்.
No comments:
Post a Comment