தேவையான பொருள்கள்:
- வரகரிசி - 1 கப்
- உ.பருப்பு - 1/4 கப்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் வரகரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
- மற்றொரு பாத்திரத்தில் உ.பருப்பையும், வெந்தயம் இரெண்டையும் தண்ணீர் ஊற்றி கழுவி 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
- ஊறவைத்த அரிசியையும், பருப்பையும் இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து,8 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும்.
- 8 மணி நேரம் களித்து அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்தவுடன் புளித்த மாவை எடுத்து இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 5-10 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.
- வேகவைத்த இட்லிகளை சூடாக பரிமாறவும்.
- சூடான,சுவையான,சத்துநிறைந்த வரகரிசி இட்லி தயார்.