தேவையான பொருள்கள்:
- கம்பரிசி - 1கப்
- வெங்காயம் - 1/2 கப்
- ப.மிளகாய் - 3
- கருவேப்பிலை - 2 கொத்து
- தேங்காய் துருவியது - 1/ கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- கடுகு,உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- க.பருப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை:
- கம்பரிசியை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு கம்பை மிக்சியில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, கடலை பருப்பு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள கம்பு மாவை சேர்த்து கிளறவும்.
- மாவில் பச்சை வாசம் போகும் வரை அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும்.
- மாவு ஆறியதும் கொழுக்கட்டைகளாக (படத்தில் காட்டியவாறு) பிடித்து கொள்ளவும்.
- பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் சூடானதும் இட்லி தட்டில் பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடங்கள் முடி போட்டு வேக வைத்து கொள்ளவும்.
- 10 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து கொழுக்கட்டையை எடுத்து சூடாக பரிமாறவும்.
- சூடான, சுவையான,சத்து நிறைந்த கம்பு கொழுக்கட்டை தயார்.