தேவையான பொருள்கள்:
- வரகரிசி - 2 கப்
- உ.பருப்பு - 3/4 கப்
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - 1 டேஸ்பூன்
- தேங்காய் - சின்ன துண்டு
- க. பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கொத்த மல்லி - 1 கொத்த மல்லி
- ப. மிளகாய் - 2
செய்முறை:
- வரகரிசி, உ.பருப்பையும் 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- ஊறியதும் கிரைண்டரில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- கடாயில் தாளிப்பதர்கு ஏற்ப எண்ணெய் ஊற்றி அதில் கடுகு , க.பருப்பு , ப.மிளகாய் , சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- பிறகு அரைத்த மாவில் தாளித்தவற்றை கொட்டி தேவையான அளவு உப்பு போட்டு இட்லி மாவு பதத்துக்கு கலந்து கொள்ளவும்.
- குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து மாவை சட்டியில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- சுவையான, சத்து நிறைந்த வரகரிசி பணியாரம் தயார்.
No comments:
Post a Comment