தேவையான பொருள்கள்:
- தினை அரிசி - 1 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- கருப்பட்டி - 3/4 கப்
- நெய் - தேவையான அளவு
- முந்திரி - 10
- திராட்சை - 5
- ஏலக்காய் - 3
செய்முறை:
- தினைஅரிசியை சுத்தம் செய்து வெறும் கடாயில் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
- பாசிப்பருப்பையும் அதே போல் வறுத்து கொள்ளவும். சூடு ஆற விட்டு மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
- கடாயில் 1/2 கப் தண்ணீர், கருப்பட்டி இரண்டும் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து வடிக்கட்டி கொள்ளவும்.
- நெய்யை கடாயில் ஊற்றி காய்ச்சி கொள்ளவும்.
- முந்திரி, திராட்சையை நெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
- ஏலக்காயை பொடித்து வைத்து கொள்ளவும்.
- கருப்பட்டி காய்ச்சிய தண்ணீரில், அரைத்து வைத்துள்ள தினை,பாசிப்பருப்பு மாவை போட்டு கலந்து கொள்ளவும்.
- பிறகு காய்ச்சி வைத்துள்ள நெய்யை சிறிது சிறிதாக கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி லட்டு பிடிக்கும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- லட்டு பிடிக்கும் பதம் வந்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பிறகு அனைத்து மாவையும் நமக்கு தேவையான அளவில் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
- இப்போது சுவையான,சத்து நிறைந்த தினை லட்டு தயார்.